|
விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கம் - பார்வை |
|
|
|
Written by வினையூக்கி
|
|
Monday, 09 June 2008 14:12 |
|
ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் சென்ற ஆண்டு சொல்லிக்கொடுத்ததையே திரும்ப திரும்ப சொல்லிக் கொடுத்தாலும் அவர்களுக்கு அந்த பணி எப்படி உவகையாக இருக்கிறது என்ற ஐயத்திற்கு விழுப்புரம் வலைப்பதிவர் பயிலரங்கில் விடைகிடைத்தது. ஒவ்வொரு முறையும் புதிய புதிய மனிதர்களுக்கும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வலர்களுக்கும் சொல்லித்தரும்பொழுது சொல்லித்தரும் விடயம் பழகின ஒன்றாக இருந்தாலும் அது சுவாரசியமாகவே இருக்கும் என்பது மீண்டும் ஒரு முறை வலைப்பதிவு, தமிழ்தட்டச்சு நுட்பங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொண்ட போது உணர முடிந்தது. அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் பயிலரங்கம் நடக்கும் கணிப்பொறி மையத்தில் மா.சிவக்குமார் மற்றும் பாலபாரதியுடன் உள்நுழைந்த போது முனைவர்.மு.இளங்கோவன் வலைப்பதிவு பயிலரங்கம் பற்றியும் தமிழ் தட்டச்சு முறைகள் பற்றியும் வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். அவரைத் தொடர்ந்து மா.சிவக்குமாரும் பாலபாரதியும் களத்தில் இறங்கினர், முதலில் மின்னஞ்சல் முகவரி இல்லாதவர்களுக்கு ஜிமெயிலில் கணக்கு துவங்கவும் அதைக்கொண்டு பிலாக்கரில் தங்களுக்கான பக்கத்தை உருவாக்கிக் கொள்ளவும் பயிற்சி அளித்தனர்.மா.சிவக்குமார், பயிற்சி பெற வந்திருந்தவர்களில் சிலர் உருவாக்கிய வலைப்பதிவுகளை உரக்கச்சொல்லி பக்கம் ஆரம்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தவர்களை உற்சாகமளித்துக் கொண்டிருந்தார். இடையே சென்னைப்பதிவர் விக்கி அலுவல்களுக்கு இடையிலும் 12 மணியளவில் வந்து எங்களை இன்ப அதிர்ச்சி அடைய வைத்தார். பயிலரங்கம் நடந்து கொண்டிருந்த போது வாழ்த்துரை வழங்க வந்த மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு க.பொன்முடிக்கும் வலைப்பதிவு ஆரம்பித்துக் கொடுக்கும் யோசனையை மா.சிவக்குமார் சொல்ல, கோரிக்கையை ஏற்றுக்கொண்ட அமைச்சர் புதிய வலைப்பதிவு அமைச்சர் உருவாக்கும் முறைகளை ஆர்வத்துடன் குறித்துக்கொண்டார். மா.சிவக்குமார் வழிமுறைகளை விளக்க, அருணபாரதி ஒளிப்படமாக திரையில் கொண்டு வர கலைஞர் என்ற புதிய வலைப்பூ அமைச்சருக்காக உருவாக்கப்பட்டது. மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர், வலைப்பதிவுகளில் ஒலி,ஒளி,படங்கள் ஆகியன இணைப்பதைப்பற்றிய நான் எடுத்த வகுப்பைத் தொடர்ந்து, ரா.சுகுமாரன் குறிச்சொல் இடுவது, அதன் பயன்பாடுகள் பற்றியும் விளக்கினார். தாமதமாக வந்தாலும் தனக்கான இடத்தை தக்க வைத்துக் கொண்ட விக்கி திரட்டிகளில் வலைப்பதிவுகளைப்பற்றி தன்னுடைய பாணியில் விரிவாகவே விளக்கிக் கொண்டிருக்க தேநீருக்காக வெளியே வந்தபோது விழுப்புரம் பதிவர் பயிலரங்க முதுகெலும்புகளான தமிழ்நம்பி , ரவி.கார்த்தி மற்றும் எழில்.இளங்கோ ஆகியாருடன் தனியாக அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் அவர்களைப் பற்றியும் அவர்களின் தமிழார்வத்தைப் பற்றியும் கேள்விக்கேட்க கிடைத்த பதில்கள் சுவாரசியமாகவும் பிரமிப்பாகவும் இருந்தது.துறை சார்ந்த தமிழ்வளர்ச்சிகளில் ஆர்வம் கொண்ட தமிழ்நம்பி தஞ்சைப் பல்கலைகழகம் தொகுத்த அருங்கலைச் சொற் அகரமுதலி உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றிருக்கும் இவர் தொலைத்தொடர்பு துறையில் பொறியாளராக இருந்து பணி நிறைவு செய்தவர்.ரவி.கார்த்தி போக்குவரத்து கழகத்தில் பொறியாளராக பணிபுரிந்து வருபவர். எழில்.இளங்கோ விழுப்புரத்தில் கணிப்பொறி மையம் நடத்தி வருபவர். மூவரும் வெவ்வேறு தளங்களில் இருந்து வந்திருந்தாலும் அவர்களை இணைத்தது தமிழ் என்றால் மிகையாகாது. கடந்த பொங்கல் திருநாளில் மருதம் என்ற பொங்கல் விழாவை விழுப்புரத்தில் சிறப்பாக நடத்திக்காட்டிய இந்த குழு, தங்களது சொந்தப் பணத்தை செலவு செய்து இந்த பயிலரங்கத்தை ஏற்பாடு செய்து இருக்கின்றனர். என்பதைக் கேட்ட போது அடைந்த மகிழ்ச்சி அளவில முடியாதது. தனித்தமிழ் ஆரவலர்களான இவர்களின் முயற்சியில் தாய் தமிழ் தொடக்கப்பள்ளி ஒன்று விழுப்புரத்தில் செயற்பட்டு வருகிறது என்ற செய்தியையும் பகிர்ந்து கொண்டனர். ரவி.கார்த்தி பொறியாளராக இருந்தாலும் தமிழ்ச்சமூகம், தெய்வங்களும் என்ற சமூக விஞ்ஞான ஆய்வு புத்தகத்தை பத்தாண்டுகளுக்கு முன்பாக எழுதி வெளியிட்டு இருக்கிறார். எத்தனை சிறப்பாக திட்டமிட்டாலும் களப்பணியாளர்கள் இல்லாவிடின் எந்த திட்டமும் சிறப்பான வெற்றியை அடையாது. தமிழ் சம்பந்தபட்ட எந்த ஒரு விசயமானாலும் கட்சி , கருத்து வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு முன்னுக்கு நிற்பவர் எழில்.இளங்கோ, இவரின் முயற்சியால் இணைய இணைப்பு மற்றும் வேறு சில ஆரம்பகட்ட வேலைகள் துரிதமாக நடந்தது என தமிழ் நம்பி மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டார். தமிழுணர்வும் அதை தொழில்நுட்பத்துடன் மற்றவர்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்று ஆர்வமும் கடினமான அலுவல்களுக்கிடையிலும் நேரத்தை தமிழுக்காக கொடுத்தால் சிறுநகரங்கள் மட்டுமல்ல, கிராமப்புறப் பகுதிகளில் கூட இத்தகைய பயிலரங்கத்தை நடத்த முடியும் என்பது அவர்களுடன் நடத்திய சிறு உரையாடலில் புரிந்து கொள்ள முடிந்தது. உரையாடலுக்குப்பின்னர் பயிலரங்க அறைக்கு வந்த பொழுது கடலூர் சீனிவாசன் கூகுள் ரீடர் பற்றி சொல்லித்தந்ததைத் தொடர்ந்து பயர்பாக்ஸ் பற்றி பாலபாரதி வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். 5.30 மணியளவில் விழுப்புரம் வலைப்பதிவர் மன்றம் சார்பாக சென்னைப்பதிவர்களுக்கு அளிக்கப்பட்ட நினைவுபரிசைப் பெற்றுக்கொண்டு மற்றும் ஒரு நிறைவான பயிலரங்கத்தில் பங்கேற்க வாய்ப்பளித்த தமிழுக்கும் பயிலரங்கம் நடத்திய நிர்வாக குழுவினருக்கும் நன்றி தெரிவித்து விடைபெற்றோம். <படங்களுக்கு இங்கே சொடுக்கவும்> துணுக்குகள் - இரண்டரை ஆண்டுகளாக மா.சிவக்குமாரிடம் “சுசே லினக்ஸ்” இன்ஸாடால் செய்து தர வைத்திருந்த கோரிக்கையை பாலபாரதி விழுப்புரம் பயணத்தில் நிறைவேற்றிக்கொண்டார்.
- பழனியில் பயிலரங்கத்துக்கு வந்திருந்த மாரி, பழனியிலும் இது போன்ற பயிலரங்கத்தை நடத்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் பயிற்சி அளிக்க வரவேண்டும் என்ற வேண்டுகோளை மா.சிவக்குமாரிடம் வைத்தார்.
- புதுவை வலைப்பதிவர்கள் சார்பாக பயிற்சி பெற வந்தவர்களுக்கு குறுந்தகடு ஒன்று அளிக்கப்பட்டது.
- கோ.சுகுமாரன் அவர்கள் சுடச்சுட பயிலரங்க நிகழ்வுகளை வலையில் ஏற்றிக்கொண்டிருந்தார்.
- சென்னைப்பட்டறையில் மட்டுறுத்தல் பற்றிய ஒரு விசயத்தை ரா.சுகுமாரனிடம் கற்றுகொண்டேன். விழுப்புரத்தில் 98 விண்டோஸ் இயங்கியில் எப்படி எழுத்துருக்களை நிறுவுதல் என்ற விசயத்தைக் கற்றுக்கொண்டேன்.
- மைலம் சந்தை ரோட்டில் சாப்பிட வண்டியை நிறுத்திய பொழுது, கால்சட்டைப் பையில் கைத்தொலைபேசியை வைத்துக்கொண்டே , கைத்தொலைபேசியை காணவில்லை என மா.சி தேட ஆரம்பிக்க, பாலபாரதி கடையில் கைத்தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவரின் காதருகே போய் அது மா.சி உடையதா என பார்த்துவிட்டு வந்தார்.
- நாங்கள் சென்றிருந்த வாகனத்தின் ஓட்டுநர் , சென்னையை நெருங்குகையில் , இந்த நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு தன் பிள்ளைகளுக்கும் கணினிப் பயிற்சி தரவேண்டும், தனது பிள்ளைகள் தமிழ்வழிக்கல்வியில் படிப்பதாகவும் தமிழில் படித்தால் கணினி கற்றுக் கொள்வது கடினமா எனக்கேட்க, மா.சிவக்குமார் தனக்கே உரித்தான பாணியில் அவருக்குத் தேவையான ஆலோசனைகளை அளித்தார்.
|
|
Last Updated ( Monday, 09 June 2008 14:31 )
|
|
|
Written by வினையூக்கி
|
|
Sunday, 08 June 2008 20:57 |
”காதலில் தோற்றவர் என்றோ வென்றவர் என்றோ கிடையாது காதலால் வாழ்ந்தவர் என்றும் வீழ்ந்தவர் என்றும் ஏதுமில்லை காதலில் ஒரே வகை.. அது காதலை உணர்ந்தவர்கள்”
நான் காதலை உணர்ந்தவன். அதனால் தான் பலவகையான காதல்களை உணர்ந்த பிறகு இப்பொழுது (மீண்டும் வேறு) ஒரு பெண்ணிடம் என் காதலைச் சொல்லப்போறேன். இந்த பொண்ணு யாரு என்னவென்று எல்லாம் கதை சொல்ல விருப்பமில்லை. நாங்க இரண்டே வரிகள் தாம் பேசிக்கொண்டோம் .. என்ன பேசிக்கிறோம்னு கவனிங்க...
“ரம்யா, உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு, உன்னைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்”
“கார்த்தி.. நாளைக்கு எஸ் னு சொல்லவா, வாலண்டைன்ஸ் டே, நாளைக்கு அக்செப்ட் பண்ணிக்கிறேனே!! பிளீஸ்”
ஜெனி எனக்கு பல்ப் கொடுத்துட்டு போய் கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கழித்து ஒரு பெண்ணிடம் விருப்பத்தைச் சொல்லி உடனடியாக முடிவுகிடைத்த மகிழ்ச்சியில் ”மழைக்கால மேகமொன்று மணி ஊஞ்சல் ஆடியதே” என மனதில் முணுமுணுத்துக்கொண்டே வீட்டிற்குப் போய்க்கொண்டிருக்கும்பொழுது நானும் ஜெனியும் வழக்கமாக முன்பு சாப்பிடும் பேக்கரி வந்தது. இந்த பேக்கரியில் தான் நாங்கள் கடைசியாக சந்தித்துக் கொண்டது.
<<இன்னும் கொஞ்சம் தொடராதோ எனும்போது முடிந்து விடுவதால் காதலும் சில சமயங்களில் ரயில் சினேகம் தான்>>
“ஜெனி , இந்தக் கவிதை எப்படி இருக்கு”
“ம்ம் நல்லா இருக்கிற மாதிரியும் இருக்கு, இல்லாத மாதிரியும் இருக்கு.. ”
“இன்னக்கி காலைல உன்னைப் பார்க்க வருமுன்ன தோனுச்சு”
“இந்த சர்காசிசம் உன்னிடம் எப்போவுமே பிடிக்காதது, சரி கார்த்தி, என் மேரேஜுக்கு வருவியா!!!”
“என்னை என்ன பூவே உனக்காக விஜய்னு நினைச்சியா!!!அந்த அளவுக்கு எல்லாம் மனசு இல்லை!!! எனிவே ஹேப்பி மேரிட் லைஃப்”
நான் சொன்னபடி ஜெனியோட கல்யாணத்துக்குப் போகல, அவளுக்கு குழந்தைக்கூட பிறந்திருச்சுன்னு கேள்விப்பட்டேன். ஆண்குழந்தை கார்த்திக்குமார் ன்னு நியுமாரலாஜிப்படி பேரு வைத்திருக்காங்கன்னு எங்க இரண்டுபேருக்கும் பொதுவா இருந்த நண்பர்கள் சொல்லிக்கேள்விப்பட்டு இருக்கேன்.. அவள் கார்த்தின்னு பேரு வைத்தால் என்ன? காத்தவராயன்னு பேரு வைத்தால் என்ன... பேரு வைக்கிறாளாம் பேரு.. ஆள் வேண்டாம் பேரு மட்டும் வேண்டுமாக்கும்!!!
இதுவரை எத்தனைபேரைக் காதலித்து இருப்பேன்... ஆறு பேர் இருக்குமா!!! இருக்கலாம்.. கூடவே இருக்கும். அதில் மூன்று ஒரு தலைக் காதல்கள் ..இந்த ஒரு தலைக் காதல் கிரிக்கெட்ல நெட் பிராக்டிஸ் மாதிரி. ஒரு சில ஒரு தலைக்காதல்களுக்குப்பின்ன நல்ல பார்முக்கு வந்துடலாம். பரஸ்பரக் காதல்களில் இந்த நெட் பிராக்டிஸ் நிறைய உபயோகமாக இருக்கும்.
கோயம்புத்தூர் ல குண்டு வைத்தது , ஜீனத்துடன் ஆன எனது ஒரு தலைக்காதல் இருதலையாய் மாறப்போகும் சமயம் ஒன்றில அணுகுண்டாய் மாறி போச்சு.”உங்க ஆளுங்க எல்லாம் பாம் பார்டிங்க போல ” என விளையாட்டுத்தனமாய் கல்லூரி இரண்டாமாண்டு ஆய்வகத்தில் அவளிடம் சொல்லி வைக்க
“இதுக்குத்தான் உனக்கும் எனக்கும் சரிவராதுன்னு சொன்னேன்... இப்போ இப்படி பேசுற நீ பின்ன என்னவேண்டுமானுலும் பேசுவ!” எனத் திட்டிவிட்டுப்போனவள் கல்லூரி முடியும்வரை பேசவே இல்லை.
சரிதான் போடி, என நானும் அவளை அதன் பின் கண்டுகொள்ளவே இல்லை. ஆனால் இந்த மடம், ஆகலேட்டி சந்தை மடம் னு என்னோட ஜூனியர் அர்ச்சனாகிட்ட ஸ்டார்ட் ஆன கடலை நட்பாகி, நட்புக்குமேலாகி , காதலும் ஆனது.
நிறைய சமயங்களில் பொண்ணுங்களுக்கு பிடிக்காத விசயங்கள் பைத்தியக்காரத்தனமாக இருக்கும். திருப்பரங்குன்றம் மஹாராஜா தியேட்டருக்கும் சிராக்கோ ஆங்கிலப்படத்துக்கும் என் காதலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு தான் அந்தப்படம் 4 ரூபாய் டிக்கெட்டை 25 ரூபாய் கொடுத்து பார்த்துட்டு வந்தேன். நான் மட்டுமல்ல.. ஒட்டு மொத்த பாய்ஸ் ஹாஸ்டலும் அங்க தான் இருந்தது.
மறுநாள் உத்தமனாட்டம் “ நேத்து நைட் செமப்படம், பிட்டும் செம பிட்டு” அப்படின்னு இரவுப்பார்த்தப் படத்தை சிலாகித்து சொல்லப்போக
”ஹவ் சீப் யூ ஆர்? எப்படி கார்த்தி ... இவ்வளவு அருவருப்பானவனா நீ?” அர்ச்சனா பாட்டு பேசிக்கொண்டே இருந்தாள்.
“அர்ச்சு, திஸ் ஈஸ் டூ மச், மைண்ட் யுவர் வேர்ட்ஸ், ”
“அந்த மாதிரிப்படம் பார்த்துட்டு உன்னாலே கூச்சமே இல்லாமல் எப்படி பொண்னுங்க கிட்ட பேச முடியுது.. “
“என்னடி, ரொம்ப பேசுற, கல்யாணம் ஆன நடக்கிறது தானே!!!”
“சே , உங்க கிட்ட பழகினதுக்காக வெட்கப்படுறேன்.. குட் பை ஃபார் எவர்”
அர்ச்சனா அப்படித் திட்டிட்டு போனபின் ஒரு வாரம் அவளுக்காக வழக்கமான நாங்கள் சந்திக்கும் மரத்தடியில் காத்திருந்தேன். அவள் வரவில்லை. அதன்பின் அந்த மரத்தடி வழியாக நான் போகவில்லை.
ஆட்டோகிராப் சேரன் மாதிரி முன்பு ஏற்பட்ட காதல் அனுபவங்களின் நினைவுத்தொடர் , சரியாக 12 மணிக்கு ரம்யாவின் தொலைபேசி அழைப்புவர அறுபட்டுபோனது.
“கார்த்தி, ஐ லவ் யூ, நானும் உன்னை, சாரி சாரி, உங்களைக் கல்யாணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்”
“கிரேட்.. நீ எனக்கு கிடைப்பது என் பாக்கியம், ஹேப்பி வாலண்டைன்ஸ் டே மைடியர் ரம்யா”
“சேம் டூ யூ கார்த்தி” இதற்கு முன் நானும் ரம்யாவும் மணிக்கணக்கில் பேசி இருந்தாலும் காதலில் விழுந்த பின் பேசுவது சுவாரசியம் தானே.
விடிய விடிய பேசத்தான் போறோம். இந்த மாதிரி காதல் வசனங்கள் பேசப்போவது எனக்கு மூன்றாவது முறை.. ரம்யாவைப்பற்றி எனக்குத் தெரியாது. தெரிந்து கொள்ள விருப்பமும் இல்லை. தோழமையில் இருந்ததைக் காட்டிலும் ரம்யா அதிக வெளிப்படையாகப்பேசினாள்.
“கார்த்தி, நான் தான் உனக்கு பர்ஸ்ட் லவ்வா?”
ஜீனத்,ஜெனி,அர்ச்சனா மூவரிடம் மனதார மன்னிப்புக் கேட்டுக்கொண்டு
“ஆமாம் ரம்யா, பர்ஸ்ட் டைம் நான் ஒரு பொண்ணுகிட்ட என் காதலை சொன்னது உன்னிடம் தான்”
இதற்கு முன்னர் வாழ்க்கையில வந்த காதல்களைக் கட்டிக்காக்க முடியல, இதையும் சொதப்பிடுவேனோன்னு மனசுல ஒரு மூலையில பயம் இருந்தாலும் .. பார்க்கலாமே!! அடுத்த வருடமும் இதே ரம்யாவோட பேசிட்டு இருந்தால் என் காதல் தேடல் முடிந்துவிட்டது..இல்லாவிடின் பயணம் தொடர்கிறது என்று வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நிமிடம், என் கதைக்கேட்டிங்க, என் வாழ்த்தையும் கேட்டுட்டுப்போயிடுங்க,
உங்க எல்லோருக்கும் காதலிகள் தின , மன்னிக்கவும் காதலர் தின நல்வாழ்த்துக்கள். |
|
தையல் மெஷினும் ஆர்கெஸ்ட்ராவும் - சிறுகதை |
|
|
|
Written by வினையூக்கி
|
|
Saturday, 07 June 2008 23:28 |
|
காஞ்சிபுரத்தில் ரம்யாவின் அம்மா வைத்திருந்த அரதப்பழசான , உபயோகமில்லாத தையல் எந்திரத்தை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வரக்கூடாது என நான் சொன்னதால் கோபித்துக்கொண்ட என் மனைவி ரம்யா , மாலை என் அலுவலக நண்பர் சுந்தரலிங்கத்தின் திருமணவரவேற்புக்கு வரமுடியாது என சொல்லிவிட்டதால் எனது மேலாளர் மோகனுடன் செல்ல வேண்டியதாயிற்று.
“அந்த தையல் மெஷின் இல்லேன்னா, இந்த ரம்யா கிடையாது.. என் எஞ்சினியரிங் டிகிரி கிடையாது... நான் உனக்கு கிடைச்சிருக்கவே மாட்டேன்” என்ற அவளின் அழுகை விசும்பலுடன் சொன்னது காதில் ஒலித்துக் கொண்டிருக்க |
|
Last Updated ( Saturday, 07 June 2008 23:50 )
|
|
Read more...
|
|
|
Written by வினையூக்கி
|
|
Saturday, 07 June 2008 23:45 |
|
சாப்பாடு மேசையில் வைத்திருந்த மிளகுத்தூள் கிண்ணத்தை உருட்டியபடியே நான் ஜெனியிடம் "நம்ம எம்.டி மோகன் மாதிரி ஒரு ஹிப்பொகிரட்டை நான் பார்த்ததே இல்லை"
"ஏன் கார்த்தி, அப்படி சொல்லுற?"
"கடவுள் பக்தி ஒரு வீக்னெஸ், தன்மேல நம்பிக்கை இல்லாதவன் தான் கடவுள்,பூஜை பின்னாடி போவான் அப்படின்னு சொல்லுறவரு, நம்ம புரஜெக்ட் சக்ஸஸுக்காக ஒரு சாமியாரைக் கூப்பிட்டு பூஜை செய்யப்போறாராம், ராப்பகலா கஷ்டப் பட்டது நாம... தாங்க்ஸ் கடவுளுக்கு, இதை வேறயாராவது செய்து இருந்தா ஒன்னுமே தெரிஞ்சுருக்காது, சீர்திருத்தவாதி மாதிரி பேசிட்டு இப்படி செய்றதை ஜீரணிச்சுக்க முடியல"
"டேக் இட் ஈசி கார்த்தி, அந்த சாமியார் வரதுனால உனக்கு என்ன நஷ்டம், அந்த புரஜெக்ட் கிளையண்ட், வரப்போற சாமியோரட பக்தர் வேற , "
நான் இந்த சாமியார் பற்றி என்னோட கல்லூரித் தோழி ரம்யா சொல்ல நிறையக் கேள்விப்பட்டு இருக்கிறேன். ரம்யாவிற்கு அந்த சாமியரின் போதனைகள் மிகவும் பிடிக்கும். அவரது புத்தகங்கள் ஏதாவது ஒன்றை வைத்து எப்போதும் வாசித்துக்கொண்டிருப்பாள். நான் ஆன்மீகத்தையும் பக்தியையும் , குறிப்பாக இந்த சாமியரை மட்டம் தட்டி பேசுவதினால் எங்களுக்கிடையில் ஆன பெரும்பாலான தொலைபேசி உரையாடல்கள் சண்டையில் தான் முடியும். தான் கல்யாணம் செய்து கொண்டால் ஆன்மீக ஈடுபாடு உள்ள ஒருவரைத்தான் தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்து கொள்வேன் என அடிக்கடிச் சொல்லுவாள். |
|
Read more...
|
|
|
Copyright © 2008 வினையூக்கி. All Rights Reserved.
|